ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியா செல்லும் பஸ் திடீரென விபத்திற்குள்ளாக சரவணன் சந்தியாவை தேடி கதறுகிறார். மேலும் இது குடும்பத்திற்கும் தெரிய வர அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.
ராஜா ராணி 2
ராஜா ராணி சீரியல், சந்தியா சரவணன் பிரிவை வைத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. சந்தியா சரவணனை பிரிய முடியாமல் தவித்து வருகிறார். நேரம் ஆக ஆக சந்தியாவிற்கு என்னவோ போல ஆகிறது.
அதுமட்டுமில்லாமல் சரவணன் சந்தியா உடனே வர அதற்கு தூரத்தில் இருந்தே பார்த்து கதறுகிறார். இது பலரையும் கண்கலங்க வைக்கும் காட்சியாகவே உள்ளது. பஸ்ஸில் அனைவரும் ஏற சரவணன் ஏறப்போகும் தருவாயில் பின்னால் இருந்து லாரி வந்து மோதுகிறது.
இதனால் பஸ்ஸின் பின் பகுதி மிகவும் டேமேஜ் ஆகிறது. சரவணன் சந்தியாவிற்கு என்ன ஆனதோ என்று கதறுகிறார். பஸ்ஸில் எங்குமே சந்தியா இல்லாமல் இருப்பதை பார்த்து கதறுகிறார். மேலும் சிவகாமி வீட்டில் பாஸ்கரும் அவரது அம்மாவும் வர என்ன விஷயமாக இருக்கும் என்று குழப்பமடைகின்றனர்.
கடைசியில் சந்தியாதான் திருமணத்தை 1 வருடத்திற்கு பிறகு வைத்து கொள்ளலாம் என்று சொன்னதாக அனைவரும் நினைத்திருந்தது தவறு என்றும், உங்களிடம் சொல்லும்போது தான் அதை கேட்டேன் என்றும் பாஸ்கரின் அம்மா சொல்கிறார்.
இதனை கேட்டவுடன் அனைவரும் என்ன நடந்திருக்கும் என்ற உண்மை புரிகிறது. பார்வதி இதுதான் சந்தியா அண்ணியின் குணம், அவரை புரிந்துகொள்ளாமல் இருந்ததற்கு நாம் தான் அசிங்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்.
மேலும் பாஸ்கர் குடும்பம் சென்றவுடன் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் சிவகாமியை நோக்கி ஓடி வருகிறார். சந்தியா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதை பற்றி சொல்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் இடிந்து விழுகிறது. இதோடு இன்றைய எபிசோடும் நிறைவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்