ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியா வீட்டை விட்டு வெளியேறியதும் அதற்கு சிவகாமி தான் காரணம் என்று ரவி குற்றம் சுமத்துகிறார். மேலும் சந்தியாவின் தோழி அனிதா சந்தியாவை பற்றி எடுத்து சொல்கிறார்.
ராஜா ராணி 2:
ராஜா ராணி சீரியலில் தற்போது சிவகாமியை ரவி கண்டபடி திட்டிகொண்டுள்ளார். உன்னால் தான் சரவணன் சந்தியாவை வீட்டை விட்டே அனுப்ப முடிவெடுத்து விட்டான் என்று சொல்கிறார். இந்நிலையில் தான் தற்போது சந்தியாவின் தோழி அனிதா வீட்டிற்கு வருகிறார்.
சரவணன் சந்தியாவை வீட்டிற்கு வந்து விடுவதாக கால் செய்ததாகவும் என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள வந்ததாகவும் சொல்கிறார். மேலும் சந்தியா இந்த குடும்பத்தில் மீது அதிக பாசம் வைத்திருந்ததாக சொல்கிறார்.
எத்தனையோ தடவை அந்த குடும்பம் உனக்கு வேண்டாம் என்று சொன்னதாகவும் அதற்கு சந்தியா தன்னுடன் சண்டை போட்டதாகவும் சொல்கிறார். இதனை கேட்ட சிவகாமி கண்கலங்குகிறார். அனிதா ஏன் உங்களுக்கு சந்தியாவை பிடிக்காமல் போனது என்று கேட்க சந்தியாவை எனக்கு பிடிக்கும், திட்டுனா பாசம் இல்லனு அர்த்தமா?? என்று கேட்கிறார்.
சந்தியா பஸ்ஸில் அழுதுகொண்டே இருக்க சரவணனால் அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் பாஸ்கர் வீட்டில் இருந்து அனைவரும் சிவகாமி வீட்டிற்கு வருகின்றனர். சந்தியாவை வெளியே அனுப்பிய விஷயம் தெரிந்திருக்குமோ என்று பயப்படுகின்றனர். இதோடு எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்