சரவணனையும், சிவகாமியையும் சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடும் சந்தியா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘ராஜா ராணி 2’!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது சிவகாமியையும், சரவணனையும் சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடுகிறார் சந்தியா. இது நிறைவேறுமா?? சிவகாசியை சரவணனிடம் பேச வைப்பாரா சந்தியா?? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் தற்போது சந்தியாவும், சரவணனும் ஒருவரை ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் போலவே சந்தியா, சரவணனுக்கு ரொமான்ஸ் காட்சிகள் வரும் என்றும் ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.

நேற்றைய எபிசோடில் கூட சரவணன், சந்தியா அண்ணனிடம் ‘சந்தியா மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சு இருக்கணும்’ என்று கூறியிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் சிவகாமி சரவணனின் நிலையை பார்த்து கண்கலங்குகிறார். இதனை பார்த்த சந்தியா சரவணனை ஏற்றுக்கொள்ளும் படி சிவகாமியிடம் கெஞ்சுகிறார். ஆனால் கொஞ்சம் கூட மனது இறங்காத சிவகாமி ஒரு பையனுக்கு வாழ்க்கையில் ஒரு பொண்ணு தான் இருக்க இருக்க முடியும்.

முன்ன நான் இருந்தேன் இப்போ நீ வந்துட்ட என்று சொல்கிறார். அப்படி எல்லாம் இல்லை அத்தை ஒரு பையன் வாழ்க்கையில் அம்மா, அக்கா, தங்கச்சினு நெறைய உறவுகள் வர தான் செய்யும். ஆனால் அம்மா ரொம்ப முக்கியம். அதை தான் சரவணனும் விரும்புறாரு என்று சொல்கிறார்.

ஆனால் எதையுமே சிவகாமி கேட்பதாக இல்லை. அடுத்ததாக சரவணனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. மாலைக்குள் 500 லட்டு ஆர்டர் வேறு உள்ளது. சரவணன் இன்னும் சாப்பிடவும் இல்லை. சந்தியா கடைக்கு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வருகிறார். சக்கரையிடம் அவரை எப்படியாவது சாப்பிட வைக்க சொல்கிறார்.

பிப்., 24 இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை – 11 ஆண்டுகளுக்கு பின்பும் நிலைத்து நிற்கிறது!!

மேலும் அந்த ஆர்டரை செய்து கொடுக்கும் படியும் சொல்கிறார். ஆனால் சரவணனின் மனநிலை சரியாக இல்லாததால் எந்த வேலையும் பார்க்க முடியவில்லை. அடுத்ததாக சிவகாமி சரவணனிடம் ஸ்வீட் கடை தன் பேரில் உள்ளதாகவும் அதற்கு தனக்கு வாடகை தரும்படியும் சொல்ல சரவணன் உடைந்து போகிறார்.

மேலும் ஆர்டரை கேன்சல் செய்ய மொபைல் நம்பரை தேட அதனை சந்தியா ஒழித்து வைக்கிறார். இதுதான் அத்தையையும், சரவணனையும் சேர்த்து வைக்க சரியான நேரம் என்றும் யோசிக்கிறார். இந்த ஆர்டர் பற்றி சிவகாமியிடம் சொன்னால் கண்டிப்பாக சரவணனுக்காக ஒத்துக்கொள்வார். பிறகு அவரகள் பேசவும் வாய்ப்புள்ளது என்றும் யோசிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here