விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு மக்களின் ஆதரவும் டிஆர்பியும் அதிகரித்து வருகிறது. தற்போது சந்தியா மீது சரவணன் கோபத்தில் இருப்பதால் அடுத்து வரும் எபிசோடுகளை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இன்றைய (20 ஜூலை) ராஜா ராணி 2 எபிசொட் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ராஜா ராணி 2:
தன் தோழியுடன் சந்தியா விவாகரத்து பத்திரத்தை பற்றி பேசியதை தவறாக புரிந்து கொண்டுள்ள சரவணன், அவர் மீது வெறுப்பை காட்டுகிறார். ஏன் தன் கணவர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என குழம்பும் சந்தியா சரவணனுக்கு போன் செய்கிறார். ஆனால் சரவணனோ தான் கடையில் வேலையாக இருப்பதாக கூறி போனை கட் செய்கிறார்.
பின்னர் சிவகாமியின் பக்கத்து வீட்டுக்காரர் தன் மருமகளுக்கு குழந்தை பிறக்க போவதாக ஸ்வீட் தருகிறார். அதை தொடர்ந்து சிவகாமியும் தன் இரு மருமகளும் எப்போது இந்த மாதிரி நல்ல செய்தி சொல்லப்போகிறார்கள் என நொந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
இதை சமையல் அறையில் இருந்து கேட்ட சந்தியா தன் மனதை தேற்றிக்கொண்டு சரவணன் வீட்டுக்கு வரும்போது அவரை வரவேற்கும்படி குளித்து ஆயத்தமாகிறார்.அப்போதுதான் சரவணன் சந்தியாவிற்கு எடுத்த புது புடவையை சந்தியா பார்க்கிறார். சரவணனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அந்த புடவையை கட்டிக்கொண்டு சரவணனுக்காக காத்திருக்கிறார்.
ஆனால் சரவணன் சந்தியா மீது உள்ள கோபத்தால் பேக்கரிலேயே தங்குகிறார். மறுபுறம் சந்தியாவிற்கும் சரவணனுக்கும் இடையே உள்ள பிரச்சனையை கண்டறிய ஆதி, பார்வதி, அர்ச்சனா, அர்ச்சனாவின் கணவர் திட்டம் திட்டி வருகின்றனர். அதோடு இன்றைய எபிசொட் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்