ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியா குளிரில் நடுங்க மனம் தாங்காமல் சந்தியாவை அணைத்து கொள்கிறார் சரவணன். மேலும் பார்வதியை பெண் கேட்டு பாஸ்கர் வீட்டிற்கு வருகிறார்.
ராஜா ராணி
ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியா சரவணனை எவ்வளவு சமாதானம் செய்தும் பிடிகொடுத்து பேசாமல் இருப்பதை நினைத்து கவலையடைகிறார். வீட்டில் என்ன சொல்லி புரியவைப்பது என்று யோசித்துக்கொண்டுள்ளார். மேலும் தூக்கிப்போட்டதாக சொன்ன மோதிரம் சரவணனின் சட்டை பாக்கெட்டில் இருப்பதை பார்த்து இவருக்கு என்ன தான் பிரச்சனை என்று நினைத்து கொள்கிறார்.
தற்போது அர்ச்சனாவின் வீட்டில் இருந்து அனைவரும் சிவகாமியின் வீட்டிற்கு வருகின்றனர். அர்ச்சனாவின் தங்கையிடம் சிவகாமி நலம் விசாரிக்கிறார். அப்பொழுது பாஸ்கர் தனது குடும்பத்துடன் பார்வதியை பெண் கேட்பதற்காக வருகிறார்.
இதனால் அர்ச்சனா பதட்டமடைகிறார். எங்கே நாம் மாட்டிகொள்வோமோ என்று பதட்டமடைகிறார். அடுத்ததாக பாஸ்கர் குடும்பம் உள்ளே வர அப்பொழுது பார்வதியை குறிப்பிட்டு பாஸ்கர் குடும்பம் பேச ஆனால் அனைவரும் அர்ச்சனாவின் தங்கை என நினைத்து கொள்கின்றனர்.
கடைசியில் பாஸ்கரின் அம்மா சிவகாமியிடம் பார்வதியை தான் பெண் கேட்டு வந்ததாக சொல்லி விடுகிறார். இதனால் அனைவரும் ஷாக்காகின்றனர். மேலும் சிவகாமிக்கு அப்பொழுது தான் நியாபகத்திற்கு வருகிறது. அதாவது பார்வதியை ஏற்கனவே தெரு முனையில் இந்த பையனுடன் பேசிக்கொண்டிருந்ததாக சொல்கிறார்.
மேலும் பார்வதி அந்த பாஸ்கரை காதலிப்பதாக தவறாக நினைத்து கொள்கிறார். இதனால் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். மேலும் அர்ச்சனா பார்வதியை கேவலமாக பேச உண்மையை சிவகாமியிடம் சொல்ல போவதாக மிரட்டுகிறார். இதனால் அர்ச்சனா பாஸ்கரை திருமணம் செய்து வைப்பதாக பார்வதிக்கு வாக்கு கொடுக்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்