நடிகை ரைசாவின் விவகாரம் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு டிரிட்மென்ட் பார்த்த மருத்துவர் தற்போது அவர் மன்னிப்பு கடிதம் வழங்க வேண்டும் என்று அதிரடியாக கேட்டுள்ளார். அதே போல் அவர் மீது வழக்கும் தொடுத்துள்ளார்.
நடிகை ரைசா வில்சன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை ரைசா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது ஸ்டோரியில் தனது புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு இருந்தார். அது, தான் ஒரு பேசியல் செய்ய மருத்துவமனைக்கு சென்றதாகவும், அவர்கள் தான் வேண்டாம் என்று சொன்ன ஒரு ப்ரொசீஜரை செய்து விட்டதால் தனது முக அழகு கெட்டு விட்டது என்று பதிவிட்டிருந்தார். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.
பிக் பாஸ் ஜூலிக்கும், சோமுக்கும் இப்படி ஒரு கனக்சனா?? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
பின், ரைசா தனக்கு தவறாக டிரிட்மென்ட் செய்ததால் அந்த மருத்துவமனை நிறுவனம் தனக்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் அந்த மருத்துவமனையின் மருத்துவர் பைரவி செந்தில் தற்போது ஒரு செய்தியாளர் சந்திப்பினை நடத்தி அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவர் கூறியதாவது, இது ஒரு பேசியல் ட்ரீட்மெண்ட் கிடையாது என்றும் இந்த சரும டிரிட்மென்ட் குறித்து ரைசாவிற்கு நன்றாக தெரியும் என்ற அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார். அதே போல் இந்த டிரிட்மென்ட் செய்வதனால் முகத்தில் இது போன்று ஏற்படுவது குறித்தும் ரைசாவிற்கும் தெரியுமாம். அதே போல் இந்த டிரீட்மென்ட் எடுத்து கொள்ளும் போது மது, புகை போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்றும் ரைசாவிற்கு தெரியும் என்று அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.அதே போல் வீக்கம் வருவது இயல்பு தான் என்றும் தெரிவித்துள்ளார். ரைசா இப்படி உள்நோக்கத்தோடு செய்ததனால் அவர் தங்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த விவகாரம் மேலும் பரபரப்பாகி உள்ளது.