தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இந்த வடகிழக்கு பருவமழை போன ஆண்டை விட இந்த ஆண்டு 15% குறைவாகவே தமிழகத்தில் பெய்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
15% மழைப்பொழிவு குறைவு:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக மழை மட்டுமே பெய்துள்ளது. இதற்கிடையில் நிவர் என்ற புயல் உருவானது. இதனால் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழைப்பொழிவை தந்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் 356 மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட 15% மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால் நிவர் என்ற புயல் உருவானது. இதனால் வடமாவட்டங்களில் எதிர்பார்த்த மழை பதிவானது. மேலும் அடுத்த சில தினங்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சில மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவு மழை பொழிந்து பற்றாக்குறையை போக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பருவமழை முடிய இன்னும் ஒரு மாதம் இருப்பதால் மாநிலம் முழுவதும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யும்.
10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!
மேலும் வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன், திருச்சியில் 54%, நாகையில் 48% மற்றும் தஞ்சாவூரில் 46% மழை பற்றாக்குறையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்னும் மழைப்பொழிவு தேவை என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.