வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று (21 ஆகஸ்ட் 2021) காலை முதலே தமிழகத்திலும் புதுச்சேரியில்லும் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் பல இடங்களில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய விவரங்களின்படி, தமிழ் நாட்டில் நாளை (ஆகஸ்ட் 22) காஞ்சிபுரம், வேலூர், கடலூர், மதுரை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தென்காசி, சென்னை, ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல ஆகஸ்ட் 23 ஆம் தேதி கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கரூர்,திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் கனமழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்