தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

0

வருகின்ற ஜூலை 17,18,19 ஆம் தேதிகளில் தமிழகத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அதே போல நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் தமிழகத்தில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 17 ஆம் தேதி தர்மபுரி, சேலம்,வேலூர், ராணிப்பேட்டை ,திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, அரியலூர் ,பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும்  18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மற்றும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவ கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து உள்ளதால் சேலம், வேலூர்,வால்பாறை வட்டாரத்தில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here