முன்கூட்டியே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: 4 மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

0

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட தகவலின் படி வரும் ஜூலை 23 ஆம் தேதி வடமேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது முன்கூட்டியே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் கீழ் குறிப்பிட்டுள்ள 4 மாநிலங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தற்போது வடமேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதீத மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே மழையால் மும்பை மாநகரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மகாராஷ்டிராவிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் இனியும் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி, ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர்,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here