தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 14 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
எந்த நடிகையும் இப்படி பண்ணல.., இப்படி இறங்கிட்டீங்களே ராஷ்மிகா – வீடு வீடாக செல்லும் அவலம்!!
தமிழக முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் தொடர்ந்து பலத்த இடியுடன் கூடிய பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து எல்லா மாநிலங்களிலும் கனமழை தீவிரம் அடைந்து உள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் அதிகமாக கனமழை பெய்ததால் மலைச்சரிவு மற்றும் பள்ளத்தாக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வாழும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனமழை காரணமாக பல முக்கியமான ஏரிகள் நிரம்பி வருகின்றன. மேலும் கனமழை வெளுத்து வாங்கியதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 14 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதாவது, தமிழகத்தில் அதிகமான கனமழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் மக்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கனமழை எதிரொலியின் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களான திருச்சி, கரூர் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர். அதில் வெள்ளம் ஏற்படும் அபாயம் பகுதியில் வாழும் மக்களை வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மற்றும் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்