சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

0
Raining
Raining

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அவ்வப்போது சில இடங்களில் மழை பொழிந்து வெப்பத்தை தணித்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம், காற்று வேக திசை மாறுபாடு ஆகியவை காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Rain
Rain

லட்சத்தீவு, வங்க அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி, தேவலாவில் 9, நடுவட்டம் 8, கூடலூர் பஜாரில் 7, அவலாஞ்சியில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here