ரயிலில் பயணிக்கும் பெண்கள் பயணச்சீட்டு இல்லை என்றாலும் பயணம் செய்யலாம். ரயில்வே விதிமுறையில் இருக்கும் முக்கிய விதியில் இதுவும் ஒன்று.
ரயில்வே விதிமுறைகள்:
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தொலைதூர பயணத்திற்கு ரயில் பயணத்தை முற்றிலும் விரும்புகின்றனர். ஏனென்றால் இந்த பயணத்தின் போது பாதுகாப்பாகவும், கட்டணம் குறைவாகவும், வேகமாக செல்வதாலும் மக்கள் முதலில் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். இதனை தொடர்ந்து ரயிலில் பயணிக்கும் ஏராளமான பயணிகளுக்கு ரயில்வே விதிகளை பற்றி தெரியவில்லை. ரயில்வே நிர்வாகம் பயனியர்களுக்கு அதிகமான விதிமுறைகளை விதித்துள்ளது.
இதை கடைபிடிக்க வேண்டும் இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும். இது பொதுவாக எல்லா ரயில் நிலையங்களில் நடக்கும் ஒன்றுதான். இந்நிலையில் ரயில்வே விதிமுறையில் பெண் பயணிகளுக்காக சில விதிமுறைகள் உள்ளன. அதாவது ரயில் பயணத்தின் போது தனிமையில் ஒரு பெண் பயண சீட்டு இல்லாமல் பயணிக்கும் போது, அந்நேரம் டிடிஆர் வந்தால் ரயிலில் இருந்து அந்த பெண் பயணியை விரட்ட முடியாது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஏனென்றால் தனியாகப் பயணிக்கும் அந்த பெண் பாதியில் இறங்கினால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் கீழே இறங்குங்கள் என்று டிடிஆர் கூறமாட்டார். மேலும் அந்த பெண் டிக்கெட் எடுக்கவில்லை என்றால் முதலில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை ரயில் நிலையத்தில் நிறுத்தி டிக்கெட் எடுத்து வேறொரு ரயிலில் அனுப்பி வைப்பார்கள். இந்த விதி கட்டாயம் பெண்களுக்கு தெரிய வேண்டும்.