நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மொபைல் போன் ஒரு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு குடும்பத்திற்கு சிலிண்டர் புக்கிங் செய்வதில் இருந்து பண பரிவர்த்தனை செய்வது வரை எல்லாம் கையில் இருக்கும் மொபைல் போனுக்குள் அடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அப்படி அவசிய ஒன்றாக இருக்கும் மொபைல் போன்கள் பயணம் செய்யும் போது தவறி விழுந்தால், உணர்ச்சி வசப்பட்டு அதை எடுக்க நாம் முயற்சி செய்வது உண்டு.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதிலும் சிலர் ரயில் பயணத்தின் போது தவற விட்டு அதை எடுக்கும் முயற்சியில் உணர்ச்சிவசப்பட்டு வெளியே குதிப்பதும் உண்டு. இப்படி இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்காக தான் ரயில்வே துறை ஒரு நடைமுறையை நமக்கு அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் எந்த இடத்தில் போனை தவறவிட்டீர்களோ, அதன் அருகில் இருக்கும் கம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசு பேருந்துகளில் இனி இந்த வசதியும் உண்டு.., போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!
மேலும் அந்த பகுதியின் லொகேஷனை ரயில்வே tracking app ல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு 183 அல்லது 139 என்ற எண்ணுக்கு கால் செய்து நீங்கள் குறித்து வைத்திருக்கும் NO, LOCATION மற்றும் உங்கள் விவரங்களை தெரிவித்தால் மிக குறுகிய நேரத்திலேயே அந்த செல்போனை தொலைந்த இடத்துக்கு சென்று ரயில்வே போலீசார் கண்டுபிடித்து கொடுப்பார்களாம்.