கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை … ராகுல் காந்தி காட்டம்!!!

0

கொரோனா இரண்டாவது அலை இந்த அளவு வேகமாக பரவியதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறைதான் காரணம் என்றும் இப்போது வரை அவர்களுக்கு கொரோனாவின் தீவிரம் புரியவில்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்ச்சித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2.6 கோடியை தாண்டியுள்ளது. இந்த நோய்ப்பாதிப்பின் காரணமாக சமீபத்திய வாரங்களில் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் போதிய மருந்துகள், ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவை இன்றி திணறிவிட்டன. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

 

இந்நிலையில் இன்று  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “கொரோனாவின் தீவிரத்தை பற்றி பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. இரண்டாவது அலைக்கு பிரதமரே காரணம். பிரதமர் மோடி நிகழ்ச்சி நடத்தும் மேலாளராக செயல்படுகிறார். மொத்த மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதத்தினருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் தடை இன்றி தடுப்பூசிகளை வழங்க சரியான உத்தி இல்லை” என கூறியுள்ளார்

மேலும் அவர், ” இந்தியாவில் தற்போது உள்ள ஊரடங்கு, சமூக இடைவெளி தற்காலிக தீர்வுகள் மட்டுமே. இவை முழுமையாக கொரோனவை ஒழிக்காது. தடுப்பூசி உத்திகளுக்கு தீர்வு காணாவிட்டால் இந்தியாவில் பல அலைகளாக கொரோனா தாக்கும். அதற்கு முன்பாக மத்திய அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.” என எச்சரித்து உள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here