நடப்பு வருடம் இந்திய அணி இரண்டு உலக கோப்பை தொடர்களில் விளையாட உள்ள நிலையில், இந்த இரு தொடரிலும் சூர்யகுமார், சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்க பயிற்சியாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் டிராவிட் :
அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பது, இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும், உலக கோப்பையை வெல்ல எதிரணிகள் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க கூடும். இதில், குறிப்பாக, ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கிடையில், இந்திய வீரர்களான, பும்ரா, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் காயம் காரணமாக தற்போது அணியில் இருந்து விலகி இருப்பது, இந்திய அணிக்கு பின்னடைவாகவே உள்ளது. இந்நிலையில், இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் அடுத்த 2 மாதம் விளையாட உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில், காயம் ஏற்படாதவாறு கவனத்துடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர், இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
மேலும், ஜூன் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை தொடர்களுக்கான அணி வீரர்களை தேர்வு செய்வதில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தற்போதிலிருந்தே திவரம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், டி20 யின் நம்பர் 1 வீரரான சூர்யகுமாரை, டி20 போல ஒரு நாள் போட்டிகளில் கடைசி 15 ஓவரில் களமிறக்கி பார்க்கலாம் என திட்டமிட்டுள்ளார். இவர், ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக இருக்க கூடுவார். மேலும், டெஸ்டில் அல்லது ஒருநாள் தொடரில் கே எல் ராகுலுக்கு பதிலாக, சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தரலாம் என சிந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.