ஷூட்டிங் செட்டை நன்கொடை அளித்த பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ படக்குழு – குவியும் பாராட்டுக்கள்!!

0

சில காலமாக நமது நாட்டை மட்டுமல்லாது உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் கொடிய வைரஸ் ஆன கொரோனா பல ஆபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ படக்குழு ஒரு மருத்துவமனை செட்டையே நன்கொடையாக அளித்திருக்கிறது.

பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ படக்குழுவின் நன்கொடை:

2019 ம் ஆண்டு துவங்கி நாளுக்கு நாள் வலுவாகி கொண்டு வரும் கொரோனா தோற்று முதல் அலையை கடந்து இரண்டாம் அலை பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் மக்கள் பெரிதும் மருத்துவமனையில் அணுமதிக்க இடம் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் . இதன் தாக்கத்தை உணர்ந்த படக்குழு படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்திற்காக அமைக்கப்பட்ட மருத்துவமனை செட்டை ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா நிவாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே அவர்களின் நடிப்பில் தயாரிக்கப்படுகிற திரைப்படமான ‘ராதே ஷியாம்’ படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இத்தாலியில் 70களின் மருத்துவமனையாக வடிவமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை செட்டானது, 50 தனி படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கிட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவைகளை கொண்ட செட்டானது தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

”படுக்கைகள் கிடைக்கவில்லை என்றும், அவை கொள்முதல் செய்வதில் சிரமம் இருப்பதாகவும் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி கூறியபோது, கடுமையான பற்றாக்குறையையும் பிரச்சனையின் தன்மையையும் உணர்ந்தேன். இதையடுத்து படத்திற்காக எழுப்பிய மருத்துவமனை செட்டை நிஜ மருத்துவமனைக்கு நன்கொடை அளிக்க முடியுமா?? என்று எனது திரைப்பட தயாரிப்பாளர்களிடம் கேட்டேன். அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டனர் என வடிவமைப்பாளர் ரவீந்தர் ரெட்டி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here