சின்னத்திரை சீரியல்கள் மூலம் தற்போது மீண்டும் வெள்ளித்திரைக்கு சென்றவர் ரச்சித்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார். அந்த வகையில் தற்போது கையில் பூனையை வைத்துக் கொண்டு பலவித போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.
விஜய் டிவி பேமஸ் சீரியல்கள் மூலம் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நாயகி ரச்சித்தா. இவர் நடித்து வரும் சீரியல்களில் அவரின் புடவை அலங்காரங்களை பார்க்கவே தனி கூட்டம் இருந்தது. அந்த அளவுக்கு நடிப்பாலும்,அழகாலும் அனைவரையும் கவர்ந்து வந்தார். மேலும் இவரின் சரவணன் மீனாட்சி சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளசுகளின் ஃபேவரைட் சீரியலாக அந்த காலத்தில் வலம் வந்தது.
அதன் பின்னர் அவருக்கு பல்வேறு டிவி சேனல்களின் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும் சீரியல் மூலம் அவருக்கு மீண்டும் வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகியாக ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. மேலும் சோசியல் மீடியா விரும்பியாகிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தன்னுடைய வீட்டிற்கு புது வரவாக வந்திருக்கும் பூனை உடன் பல புகைப்படங்களை எடுத்து அதை பதிவிட்டு உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்