விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வருபவர் ரச்சித்தா மகாலட்சுமி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். மேலும் அதோடு சேர்த்து ஒரு தத்துவ கேப்சன் பதிவிட்டு உள்ளார்.
இவர் தனது வாழ்க்கையை தொடங்கியது என்னமோ சின்னத்திரை மூலமாகதான். அதில் அவருக்கு கிடைத்த பெயரையும் புகழையும் வைத்து கொண்டு தற்போது இவர் கன்னட சினிமா திரைக்குள் நுழைந்தார். அதுவும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு சமீபத்தில் கிடைத்து உள்ளது. மேலும் இவர் சின்னத்திரையில் இருந்து சென்ற பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போல வெள்ளித்திரையில் ஜொலிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்து உள்ளது.
மேலும் இவர் இன்ஸ்டா போட்டோ ஷூட்களும் அதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. அதாவது சீரியலிலும் சரி, போட்டோ ஷூட்களும் சரி புடவையில் தான் வலம் வருவார். இந்நிலையில் அவரின் சமீபத்திய போட்டோ ஷூட்கள் மார்டன் ட்ரெஸில் வெளிவந்து அனைவரையும் ஆச்சிரியத்திற்கு உள்ளாகியது. மேலும் இவர் தற்போது நடித்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் இருந்து விலக போவதாக ஒரு செய்து வேறு வெளியானது.
இது குறித்து அவர் ஏதும் வாய் திறக்காத நிலையில் இது தற்போது வரை வதந்தியாவே இருந்து வருகிறது. மேலும் இதுவரை அவர் நடித்த விஜய் டிவி சீரியல்கள் மூலம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது நாம் அறிந்த ஒன்றே. அதே போன்று தான் அவரின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலமாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் தற்போது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு, அதனோடு சேர்த்து , ‘எதையும், யாரையும் பின் தொடர வேண்டாம்… உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்…பொறுமையாக நடப்பதை கவனியுங்கள் ‘ என்பது போன்ற ஒரு கேப்சன் பதிவிட்டு உள்ளார். மேலும் அவரின் மனம் இந்த கேப்சன் போலவே இருப்பதால் தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்