சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. அதற்கு முன்பும் பின்னரும் நிறைய சீரியலில் நடித்து உள்ளார். இருப்பினும் இந்த சீரியல் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் மாங்காக்களை திருடி அதை அடுக்கி வைப்பது போன்று பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் எக்கசக்க கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ரஷிதா மகாலட்சுமி தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழிகளிலும் பல சீரியல்கள் நடித்துள்ளார். தமிழில் பிரிவோம் சிந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர். அந்த நாடகத்தில் ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் ஜோதி மிகவும் கருமையான தோற்றத்தில் அழகில் குறைந்தவளாகவும், அந்த அழகால் அனைவரின் விமர்சனத்திற்கு உள்ளாகும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.
இதை தொடர்ந்து,இளவரசி ,சரவணன் மீனாட்சி -2 மற்றும் 3 பாகம் ,நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் -2ம் பாகம் என தமிழிலும் ,தெலுங்கு ,கன்னடத்திலும் பல சீரியல்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் சரவணன் மீனாட்சி சீரியல் மேலும் அவர் சின்னத்திரையில் ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்தவர். அந்த சீரியலில் அவரின் நடிப்புக்கான ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம் என்றால், அவரின் உடை அலங்காரத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.
அந்த சீரியல் ஒளிபரப்பான காலகட்டத்தில் இளசுகளின் சின்னத்திரை கனவு கன்னியாகவே இருந்தார் என்பது மிகையில்லை. தற்போது அவர் மாங்காகளை திருடுவது போல ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “That pure happiness u get wen thiruding mangaaaa ” என்று குறிப்பிட்டு உள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்