சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மனதை தன் வசப்படுத்தியவர் ரச்சித்தா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு நாய் குட்டியை தன்னுடைய மடியில் வைத்து கட்டி பிடித்தவாறு உள்ளார்.
விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நிற கேலியால் பெரும் அளவில் மனதால் பாதிப்படையும் ஒரு அழுத்தமான பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். எனினும் அவர் அந்த சீரியல் மூலம் அந்த அளவுக்கு ஒன்றும் பேச படவில்லை. அதனை தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சரவணன் மீனாட்சி சீசன் 2.
இந்த சீரியலில் பாவாடை தாவணி கட்டி வந்து ரசிகர்களை ஆல் அவுட் செய்தார். மேலும் அந்த சீரியலின் கதையும் மற்ற சீரியல்களில் இருந்து சற்று மாறுபட்டு திரைப்படங்களுக்கு இணையாக ரொமான்ஸ் காட்சிகள், சண்டை காட்சிகள் என தனித்துவம் பெற்று விளங்கியது. இதனாலேயே இந்த சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகளும் மக்களுக்கு நன்கு பார்ச்சியமானார்கள். மேலும் அந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உருவானது.
அதே போல் ரச்சித்தாவுக்கும் இந்த சீரியல் ஒரு திருப்புமுனை அமைந்தது. அதை தொடர்ந்து இவர் பல்வேறு டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழை தவிர்த்து கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களிலும் நடித்து உள்ளார். மேலும் இவர் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கு தற்போது கன்னட திரையில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. என்ன தான் அவ்வளவு பிஸியாக படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து கொண்டிருந்தாலும் தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை. அதாவது சோசியல் மீடியாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு நாயை தன் மடியில் வைத்து கொண்டு கட்டியணைத்தவாறு உள்ளார். இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அதிஷ்டசாலிடா நீ…இந்த சான்ஸ் எங்களுக்கு குடுத்து வைக்கலியே… என்பது போன்ற கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில ரசிகர்களை அந்த புகைப்படங்களை ஏக்கத்துடன் பார்த்து பெருமூச்சு விடுகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்