விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தற்போது அவர் கருப்பு மற்றும் வெள்ளை நிற சேலையில் மதி மயக்கும் கொள்ளை அழகில் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
விஜய் டிவி சீரியல் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகை ரச்சிதா. அவர் நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலின் ஜோதி கதாபாத்திரம் அனைவரையும் அதிக அளவு ஈர்த்தது. அதன் பிறகு அவர் பல சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
அதாவது, இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பல சீரியல்கள் அவரின் நடிப்பு திறமைக்கு சான்றாகும். அதிலும் அவர் நடிப்பில் படு ஹிட்டான சரவணன் மீனாட்சி சீரியல் இளசுகளையும் சீரியல் பார்க்க வைத்த ஒரு சின்னத்திரை தொடராகும்.
தற்போது அவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற மிக விறுவிறுப்பான சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியல் மகா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தற்போது கருப்பு மற்றும் வெள்ளை நிற சேலை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகில் திகைத்து போய் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்