ஒளியிலே தெரிவது தேவதையா… நாம் இருவர் நமக்கு இருவர் நாயகியின் மாஸ் போஸ்!!!

0

மக்கள் மத்தியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மீனாட்சியாக அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் ஒளியில் தோன்றும் ஒரு தேவதையாக புடவையில் காட்சி தருகிறார்.

சீரியல்கள் மூலம் ரசிகர்களை சேர்த்த நாயகிகளில் ஒருவர் நடிகை ரக்ஷிதா. இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் ஒரு தொகுப்பாளினியாக தன்னை முன்னிலை படுத்தி கொண்டவர். இவர் வெள்ளித்திரையில் உப்பு கருவாடு என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

இருப்பினும் அவருக்கு வெள்ளித்திரை அந்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு சீரியல் தன்னுடைய முழு கவனத்தை திருப்பினார். மேலும் அவருக்கு பெரும் புகழ் கொடுத்த சீரியல் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல்.

அதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து உள்ளார். அதாவது,பிரிவோம் சந்திப்போம், இளவரசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் தன்னுடைய மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அந்த சீரியலில் முத்தரசனை கொன்றது யார் என்ற உண்மையை நோக்கி கதை நகர்கிறது.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் சிறிது லைட் ஒளியில் முகத்தை காட்டியபடி போஸ் கொடுத்து உள்ளார். புகைப்படங்கள் மூலம் ரக்ஷிதா ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் இந்த புகைப்படங்கள் எக்கசக்க லைக்ஸ்களை அள்ளி  உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here