விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர உள்ளார். அதாவது நம்ம ரக்ஷிதா கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெள்ளித்திரையில் பிரபலங்களாக இருக்கும் பலர் சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள் தான். அதிலும் ஒரு சிலர் விஜய் டிவி மூலமாக சென்றவர்கள். அதாவது சந்தானம், சிவகார்த்திகேயன், மா கா பா ஆனந்த், பிரியா பவானி சங்கர், ரமேஷ் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இணைய உள்ளார் சரவணன் மீனாட்சி சீரியல் நாயகி மீனாட்சி என்ற ரக்ஷிதா மஹாலக்ஷ்மி.
அதாவது இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் டிவி சீரியல் மூலம் திரைக்கு வந்தார். அதை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படங்கள் நடித்து உள்ளார். மேலும் தற்போது இவர் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கன்னட திரையில் மீண்டும் நுழைய வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதுவும் ஒரு கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கும் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் வரிசையில் தற்போது ரக்ஷிதா மஹாலக்ஷ்மியும் இணைந்து உள்ளார். இவரும் வெள்ளித்திரையில் தன்னுடைய முத்திரையைப் பதிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் வெகுவாக எழுந்து உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்