ஒருத்தர பத்தி தெரியாம எதுக்கு Judge பண்ணனும்…நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு பதிலடி கொடுத்த ரக்ஷிதா!!! 

0

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் தற்போது இன்ஸ்டா  லைவ் சாட்டின் போது ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு காரசாரமாக பதில் அளித்து உள்ளார். இந்த வீடியோ தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த  இணையத்தில் வைரலானது.

விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஜோதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெரிய வந்தவர் ரக்ஷிதா. அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, இளவரசி, கீதாஞ்சலி  போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மேலும்  இவர்கள் இருவரும் இணைந்து நாச்சியார்புரம் என்ற ஜீ தமிழ் சீரியலில்  நடித்து உள்ளனர்.

தற்போது இவர் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மிர்ச்சி செந்திலின் ஜோடியாக மகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய அழகு நிறைந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது ரசிகர்கள் உடன் லைவ் சாட்டில் உரையாடி உள்ளார். அப்போது ரசிகர்கள் சில கேட்ட கேள்விகள் மற்றும் நெட்டிசன்கள் நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு நச்சுனு பதிலடி கொடுத்து உள்ளார்.

காதல் சடுகுடுவில் ரசிகர்களை ஆஃப் செய்த பிக் பாஸ் சம்யுக்தா – வைரலாகும் வீடியோ!!

அதாவது ரசிகர்களின் கேள்விக்கு  ஒருத்தர பற்றி தெரியாம எதுக்கு judge பண்ணனும், நான் எதுக்கு கோவமா பேச வேண்டும் இது போன்ற பல காரசாரமான விடைகளை அளித்து உள்ளார். மேலும் ரசிகர்களின் விருப்ப பாடல்,விருப்ப படம் போன்ற கேள்விகளுக்கு செம்ம குலாக தன்னுடைய விருப்ப பாடல் மற்றும் படத்தை பற்றி பதில் அளித்து உள்ளார். அவரின் இந்த லைவ் சாட் வீடியோவை  தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here