மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த துரித நடவடிக்கை – பிரதமர் நரேந்திர மோடி
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விரைவாக செலுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது பேசுகையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை மிக மோசமான பாதிப்பை தற்போது ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3, 43, 144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 4000 பேர் பலியாகியுள்ளனர்.
Watch | "18 crore vaccine doses given so far in the country. Free #vaccination is being done in government hospitals": Prime Minister Narendra Modi #CovidVaccine pic.twitter.com/KgvUXjLVRB
— NDTV (@ndtv) May 14, 2021
நாட்டில் இதுவரையில் 179.3 மில்லியன் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், இன்று மட்டும் 2.03 மில்லியன் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பிரதமர் மோடி அவர்கள், ஒரு வாரத்திற்கு முன்பு 4 லட்சத்திற்கும் மேல் இருந்த பாதிப்பு, தற்போது 3.4 லட்சத்திற்கு வந்துள்ளது என குறிப்பிட்டு பேசினார். தற்போது இந்தியாவில் 3.7 மில்லியன் மக்கள் சிகிச்சையில் உள்ளனர் என்றும், இதே போல் நாட்டில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணைக்கையும் உயர்வதாக தெரிவித்தார். எனவே நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.