இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ள இந்திய வீராங்கனை…! – ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த கவுரவம் !!!

0

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானில் உள்ள டோக்கியோ மாகாணத்தில்  ஒலிம்பிக் போட்டியானது நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் மிக பெரிய கவுரவம் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு கிடைத்து உள்ளது.

ஒவ்வொரு முறையும்  நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது அந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் நாடு வாரியாக அணிவகுத்து செல்வார்கள். அதன்படி, தத்தம் தங்கள் தாய் நாட்டின் தேசிய கொடியை ஒரு வீரர் முன்னேந்திய படி செல்ல அவரை அந்த நாட்டின் மற்ற வீரர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். அந்த வகையில் இந்த முறை நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்த வாய்ப்பு இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்துக்கு கிடைத்து உள்ளது.

அதாவது, ஜூலை 23ம் தேதி  ஜப்பான் டோக்கியோவில்  ஒலிம்பிக் போட்டிகளின்  தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய தேசிய கொடியை பேட்மிட்டன் வீராங்கனை  பி.வி .சிந்து ஏந்தி செல்வார் என்று  இந்திய ஒலிம்பிக் சங்கம் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் இவரின் சாதனைகள் அடிப்படையில் அவருக்கு இந்த கவுரவம் கிடைக்க பெற்று உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் அந்த நாட்டின் தேசிய கொடியை ஏந்தி செல்வது அந்த நாடு  தரப்பில் அந்த வீரர்களுக்கு  அளிக்கப்படும் கௌரவம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here