மக்களே…, தீபாவளி பண்டிகையொட்டி இந்த பகுதிகளுக்கு செல்ல தடை…, அதிரடி அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!

0
மக்களே..., தீபாவளி பண்டிகையொட்டி இந்த பகுதிகளுக்கு செல்ல தடை..., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!
இந்திய மக்கள் அனைவரும் தற்போது தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி உள்ளனர். வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்த பண்டிகைக்கு வெளியூரில் உள்ள மக்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட விரும்புவர். இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநில அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வகையில், புதுச்சேரி மாநில அரசானது தீபாவளி பண்டிகையொட்டி நகர பகுதிக்குள் மக்கள் அதிக அளவில் வர கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதாவது, இன்று (நவம்பர் 9) முதல் வரும் தீபாவளி (நவம்பர் 12) வரை போக்குவரத்தை மாற்றம் செய்துள்ளது. குறிப்பாக, இந்த குறிப்பிட்ட நாட்களில் மாலை 4 மணி முதல் காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here