ஊரடங்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அமல்!!

0

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் மக்களின் தேவைக்கு ஏற்ப அதே சமயம் தொற்று பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகின்றன. தற்போது புதுச்சேரி அரசும் ஏற்கனவே தளர்வுகளுடன் அமலில் இருந்த ஊரடங்கை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீடித்துள்ளது.

அம்மாநிலத்தில் பொது போக்குவரத்து இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓட்டல்கள், விடுதிகள், உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 10 மணி வரை இயங்கலாம். மேலும் அங்கு வழக்கம் போல இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here