‘புஷ்பா’ தி ரிட்டர்ன்ஸ்….,படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்….,

0
'புஷ்பா' தி ரிட்டர்ன்ஸ்....,படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்....,
'புஷ்பா' தி ரிட்டர்ன்ஸ்....,படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்....,

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘புஷ்பா’. தெலுங்கு மொழியில் உருவாகி தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இத்திரைப்படம் ஆக்ஷன் டிராமா வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில், நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய்களை தாண்டி வசூல் குவித்திருந்தது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து, புஷ்பா இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

IPL 2023: டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு…..,பிளேஆப் வாய்ப்பு யாருக்கு?

அந்த வகையில், ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி இருப்பதாகவும், இந்த படத்தில் வரும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அதனால், விரைவில் திரையரங்குகளில் புஷ்பாவை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here