நடிகை ராஷ்மிகாவால் புஷ்பா 2 வில் ஏற்பட்ட மாற்றம் – இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு!!

0
நடிகை ராஷ்மிகாவால் புஷ்பா 2 வில் ஏற்பட்ட மாற்றம் - இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு!!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா குறித்த காட்சிகளுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி மாற்றம் :

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி பான் இந்திய மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. இதன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, இதன் 2ம் பாகத்தை இயக்கும் அதிரடி முயற்சியில் சுகுமார் இறங்கினார். இரண்டாம் பாகத்திற்கான கதையை முதல் பாகம் வெளியாகும் போதே முடித்துவிட்டார். ஆனால், சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர், கேஜிஎஃப்2 உள்ளிட்ட படங்கள் சாதனை படைத்து விட்டதால், புஷ்பா 2 வில் சில மாற்றங்களை கொண்டு வர விரும்பினார்.

இதையடுத்து, ராஷ்மிகா குறித்த காட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதையை இறுதி செய்த பிறகு ஜூலை மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புஷ்பா 2 வில் ராஷ்மிகா குறித்த காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here