பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய முதல்வர்:
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களின் ஆட்சி நடந்து வந்தது. இங்கு உட்கட்சி பூசலால் ஏற்பட்ட பிரச்சனையால் அம்ரிந்தர் தானாக பதவி விலகினார். இதனை அடுத்து, இங்கு புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டி வந்தது. இந்த நிலையில், பஞ்சாபின் அடுத்த முதல்வராக தலித் சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
இவர் இதற்கு முன்னால், அமரீந்தர் சிங் அரசில் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது. அவரோடு சேர்த்து, ஓ.பி.சோனி, சுக்ஜிந்தர் எஸ் ரந்தவா உள்ளிட்டோர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்