பழைய ஓய்வூதிய திட்டம் Must., அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் கடிதம்! அரசுக்கு பறந்த கோரிக்கை!!

0
பழைய ஓய்வூதிய திட்டம் Must., அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் கடிதம்! அரசுக்கு பறந்த கோரிக்கை!!
பழைய ஓய்வூதிய திட்டம் Must., அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் கடிதம்! அரசுக்கு பறந்த கோரிக்கை!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியர்கள் அரசுக்கு அதிரடி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அரசுக்கு கடிதம்:

பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் முன்னணி துணை கமிஷனர் சுரபி மாலிக் அவர்களிடம் அதிரடி கடிதம் ஒன்றை வழங்கி உள்ளனர். அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, இதுவரை நிலுவையில் உள்ள ஓய்வூதிய தொகையை உடனே வழங்குவது குறித்த பல்வேறு கோரிக்கைகளை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமிப்பது, அவர்களுக்கான தகுதி காலத்தை ஓராண்டாக குறைப்பது, தற்காலிக ஆசிரியர் நியமனத்தை முறைப்படுத்துவது போன்ற செயல்களில் அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை.., பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!!

இது போக 2018 க்கு பின் பதவி உயர்வு பெற்ற அனைத்து ஆசிரியர்களும் திறன் தேர்வு கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் எனவும், உரிமைக்காக போராடிய ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மட்டும் குற்றப்பத்திரிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, இந்த கடிதம் குறித்த முக்கிய கூட்டம் வருகிற ஜனவரி 29ஆம் தேதி, நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here