ஐபிஎல் தொடரில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. அதில் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மதியம் 3.30 மணி அளவில் தொடங்கவுள்ளது.
பஞ்சாப் vs ஐதராபாத்:
இந்த தொடரின் முதல் போட்டியிலே 200 ரன்களுக்கு மேல் குவித்து தனது முதல் போட்டியிலே பஞ்சாப் அணி அதிரடி காட்டியது. காரணம் அந்த அணியில் பல அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். இருந்தாலும் இந்த அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இருந்தும் முதல் போட்டியில் இருந்த வீரர்களின் செயல்பாடு அடுத்த போட்டிகளில் குறைந்துவிட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எனவே இன்றைய போட்டியில் பேட்டிங்கில் இந்த அணி மிக பெரிய இலக்கையும், பந்துவீச்சில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த தொடர் தொடக்கத்தில் இருந்தே ஐதராபாத் அணிக்கு மிக மோசமாக இருந்து வருகிறது. இந்த அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது ஐதராபாத் அணி.
மேலும் இந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரரான கேன் வில்லியம்சனை அணியில் சேர்க்காதது அனைத்து ரசிகர்களுக்கு பெரும் குழப்பமாக இருந்து வருகிறது. எனவே இன்றைய போட்டியில் வில்லியம்சன் கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர். அதேபோல் நடராஜன் காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடவில்லை. அது அந்த அணிக்கு பெரும் இழப்பு.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்த போட்டியில் பங்கேற்றால் அணிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கும் என்பர் கூறப்படுகிறது. இன்று நடைபெறும் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அதிக கவனம் செலுத்தினால் ஐதராபாத் அணி கண்டிப்பாக தனது வெற்றியை பதிவு செய்யும். இதுவரை இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐதராபாத் அணி 11 முறை மற்றும் பஞ்சாப் அணி 5 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது.