முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற புலியூர் நாகராஜன் கொரோனா வைரசால் உயிரிழப்பு..!

0

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த திருச்சியைச் சேர்ந்த புலியூர் நாகராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

புலியூர் நாகராஜன் உயிரிழப்பு..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26ம் தேதி திருச்சி வந்தபோது முதல்வரை விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜனும் இடம் பெற்றிருந்தார். மேலும் முதல்வர் முக்கொம்பு மேலணை புதிய கதவணை கட்டும் பணியை பார்வையிட்ட போதும் விவசாய சங்க பிரதிநிதிகள் குழுவில் அவரும் உடனிருந்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் திடீரென அவருக்கு அன்று மாலையே கடுமையான உடல்வலி மற்றும் சோர்வு ஏற்பட்டுள்ளது. பின்னர் தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் அதிகரித்ததை தொடர்ந்து அது கொரோனா அறிகுறி எனக் கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை புலியூர் நாகராஜன் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here