
தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்பை நடத்தும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் வரும் கல்வியாண்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இத்திட்டத்தின் முதற் கட்டமாக எவ்வித ஆய்வுகளுமின்றி 78 பள்ளிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அனுமதியை வழங்கி உள்ளனர். மற்ற பள்ளிகளுக்கு கூடிய விரைவில் அனுமதி கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு CBSE பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்பினை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
நயன் மூஞ்சி இப்படி ஆனதற்கு இதுதான் காரணம்.., உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “மாநிலத்தில் கல்வி, சுகாதாரம் சிறப்பாக இருந்தால் தான் வளர்ச்சி ஏற்படும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஆசிரியர்கள் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு மாணவர்களை திறமை மிக்கவர்களாக மாற்ற வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக தேர்ச்சி விகிதத்தை காட்ட வேண்டும்.” என பேசியுள்ளார்.