தமிழகத்தில் ஏப்ரல் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ உத்தரவு!!

0

புதுக்கோட்டை மாவட்டத்தில், வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆட்சியர் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோயில் திருவிழாக்கள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.

ஆத்தாடி.., இப்படி விரிச்சு காட்றீங்களே கிரண்.., வெடவெடத்து போன இளசுகள்!!

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா வருகிற ஏப்ரல் 11ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா, இப்போது நடத்தப்படுவதால் அதிகளவு பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால், வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். அன்றைய தினம், பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் பொருட்டு, மற்றுமொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பணி நாளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here