புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து சமீபத்தில் புதுச்சேரியிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல முக்கிய அம்சங்களும், திட்டங்களுக்கு நிறைவேற்றப்பட்டது. அதில் கேஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி போன்ற இன்னும் பல சலுகைகளை அரசு மக்களுக்கு வழங்கி இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இந்த பட்ஜெட்டில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்களும் பதிலளித்தனர். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தின் முதல்வரும், நிதி துறை அமைச்சருமான ரங்கசாமியிடம், புதுச்சேரிக்கு எப்போது மாநில அந்தஸ்து கிடைக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழகத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிதவை உணவகம் (Boat House)., வெளியான சூப்பர் அறிவிப்பு!!
இதற்கு பதிலளித்த முதல்வர் “புதுச்சேரிக்கு மாநில தகுதி வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்”. விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என உறுப்பினர்களுக்கு உறுதி அளித்துள்ளார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஆளும் கட்சி மட்டும் இல்லாமல் எதிர்க்கட்சியும் பெரும் கோரிக்கைகளை விடுத்து வருகிறது.