புதுச்சேரியில் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாணவர்களுக்கு அரிசி, பணம் – அமைச்சர் அறிவிப்பு..!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
12ம் வகுப்பு மறுதேர்வு ரிசல்ட் எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
இந்நிலையில் புதுசேரி அமைச்சர் கூறியதாவது, புதுச்சேரியில் 1 – 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும். 6-8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.330 வழங்கப்படும். மதிய உணவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.