மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி வரை விடுமுறை – கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

0
மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி வரை விடுமுறை - கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி வரை விடுமுறை - கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

தொற்றுப் பரவல் காரணமாக, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை, விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு:

கொரோனா பரவலுக்கு பின், பள்ளிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் மாணவர்கள் பள்ளிக்கு, வருவதால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க கவுன்சிலிங் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் புதுச்சேரியில், கடந்த சில தினங்களாக தொற்று காய்ச்சல் குழந்தைகளிடையே பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த காய்ச்சலின் வேகத்தை பார்த்த சுகாதாரத்துறை, மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்ததது.

சுகாதாரத்துறை கோரிக்கையின் பேரில், புதுவை மற்றும் காரைக்காலில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வரும் செப்.25ம் தேதி வரை முழு விடுமுறை அளிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாகவும், விரைவில் நிலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here