தற்போது பயன்பாட்டில் உள்ள, மின் மீட்டரை மாற்றி விட்டு விரைவில் ப்ரீபெய்டு மின் மீட்டர் என்ற திட்டத்தை கொண்டு வர புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் முடிவு:
புதுவை அரசு சமீபத்தில் மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து, ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இந்த முடிவை, தற்காலிகமாக ஒத்தி வைத்தது. இந்த நிலையில் பிரீபெய்டு மின் மீட்டர் என்ற திட்டத்தை, கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 251.10 கோடி மதிப்பில் திட்டம் தயாரித்து, மத்திய அரசின் மானியத்துடன் இதை செயல்படுத்த உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பயன்பாட்டாளர்கள் தங்கள் மின் இணைப்பு அக்கவுண்டில் குறிப்பிட்ட பணம் டெபாசிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும், நாம் செலவழித்த மின்சாரத்தை கணக்கெடுத்து, அதற்கு தகுந்த தொகை நம் அக்கவுண்டில் இருந்து கழிக்கப்படும். அக்கவுண்டில் பணம் தீரும் பட்சத்தில் நமக்கு குறுந்தகவல் வரும். நாம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு கூடுதல் நேர வகுப்புகள்., கல்லூரி கல்வி இயக்ககம் முடிவு!!
இந்த திட்டம், மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் மொபைல் பயன்பாடு பற்றி தெரியாத, சாமானிய மக்கள் இத்திட்டத்தால் மின்சாரத்தை இழந்து மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம் அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு, பின்பு மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது.