புதுவையில் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் – விவரங்கள் வெளியீடு!!

0

நமது அண்டை மாநிலமான புதுவையில் அக்டோபர் 21, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பு:

தமிழகத்தில் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதனை அடுத்து, நமது பக்கத்து மாநிலமான புதுவையில் அக்டோபர் 21, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் முதல் கட்டமாக அதாவது 21ம் தேதி காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக 25ம் தேதி புதுச்சேரி நகராட்சி, உழவன் கரை கொம்யூன் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடைபெறும் என்றும், மூன்றாம் கட்டமாக 28ம் தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here