மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன் அதனை சிறப்பாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இந்த வகையில், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு ஒவ்வொரு மாநில அரசும் மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதில், புதுச்சேரி மாநில அரசானது விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 10,000 ரூபாயை வழங்கி வருகிறது. இந்த தொகையை ரூ.12,000 மாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக இருப்பதாக இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு தற்போது துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், புதுச்சேரி விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.253.7 கோடி நிதி., அரசாணை வெளியீடு!!!