மின்சார ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை – பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு! மாநில அரசு திட்டவட்டம்!!

0
மின்சார ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை - பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு! மாநில அரசு திட்டவட்டம்!!
மின்சார ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை - பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு! மாநில அரசு திட்டவட்டம்!!

மின் துறை ஊழியர்கள், கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என, ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு எச்சரிக்கை:

நம் அண்டை மாநிலமான புதுவையில், மின்சார துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து, மாநிலம் முழுவதும் உள்ள மின்துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, போராட்டக்காரர்கள் துணை மின் நிலையங்களில் புகுந்து மின் இணைப்பை துண்டித்ததால் மாநிலமே இருளில் மூழ்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஊழியர்களின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் இறங்கினர். இதனை பார்த்த அரசு, ஊழியர்களின் இந்தப் போராட்டம் முறையற்றது. உடனடியாக அவர்கள் இன்றைய தினத்திற்குள் பணிக்கு திரும்பாவிட்டால், விளைவுகள் மிகவும் மோசமாகிவிடும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வந்தாச்சு 5G சேவை., ஆனா அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ஆப்பு இருக்கு? மிரண்டு போன பயனர்கள்!!

அதுபோல, மாநிலத்தின் தற்போதைய நிலையை சரிகட்ட உடனடியாக 24, மத்திய பவர் கிரீட் அதிகாரிகளை களம் இறங்கியுள்ளனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் இவர்கள் துணை மின் நிலையங்களை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தால் மாநிலம் முழுவதும் தற்போது, மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here