
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அந்த வகையில் புதுச்சேரி முதல் ரங்கசாமியும் மருத்துவ படிப்புக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் அம்மாநிலத்தில் ‘எனது பில் எனது உரிமை’ பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. அதற்குள் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். இல்லையென்றால் பழைய நிலையே தொடரும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மாணவர்கள் சற்று கலக்கமடைந்துள்ளனர்.
தமிழில் பெயர் பலகை வைக்காத வியாபாரிகளே., இனி இதுதான் தண்டனை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!