முதியோர், விதவை மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் தொகை போன்றவை மத்திய, மாநில அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதில் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த திட்டங்களின் மூலம் பயனடைபவர்களுக்கு பல சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அரசு விதவைகளுக்கான நிதியுதவி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது புதுச்சேரியில் கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை 3000 உயர்த்தி வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுத 2 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும்., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!!
இதை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதாவது காரைக்காலில் சமீபத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் பயிர்கள் அதிக அளவு சேதமாகி நஷ்டம் ஏற்பட்டது. தற்போது இந்த விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.