புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்காக 10% இட ஒதுக்கீடு நிராகரிப்பு – மத்திய அரசு அதிரடி!!

0

மருத்துவ படிப்பிற்காக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு புதுச்சேரி அரசு மருத்துவ படிப்பிற்காக 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது. தற்போது இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

புதுச்சேரி:

மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சேருவதற்கு மத்திய அரசு நுழைவு தேர்வு ஒன்றை கொண்டு வந்தது. அந்த தேர்வு தான் நீட். இந்த தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேரமுடியும். இந்த தேர்வு கடும் கட்டுப்பாடு விதிமுறையுடன் மத்திய அரசு நடத்தி வந்தது. மேலும் இந்த தேர்வில் சிபிஎஸ்சி முறையில் அனைத்து கேள்விகளும் கேட்கப்படுவதால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சற்று திணறினர். தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர துடிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் தமிழக அரசு ஓர் அதிரடியான அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு நீட் நுழைவு தேர்வில் 7.5% ஒதுக்கீடு வழங்கப்பட்டு என்று அறிவித்தது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் புதுவை அரசும் ஓர் முடிவை எடுத்தது. அதன்படி புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.

சட்டமன்ற தேர்தலுக்கு தபால் வாக்குமூலம் தொடக்கம் – நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

இந்நிலையில் தற்போது இதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்ததாவது புதுவை அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. புதுவை அரசு கொண்டு வந்த இந்த உள்ஒதுக்கீடு சட்டவிரோதம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் புதுவை துணைநிலை ஆளுநர் இந்த உள்ஒதுக்கீடை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here