மதுபான கடைகளை இரவு 9 மணி வரை திறக்க அனுமதி – புதுச்சேரி அரசு உத்தரவு!!!

0

புதுச்சேரி அரசு தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 30 ஆம் தேதி வரை நிடித்துள்ளது. மேலும் அந்த யூனியன் பிரதேச அரசு மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது.

பல மாநிலங்கள் அடுத்தடுத்து ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து தளர்வுகளுடனான ஊரடங்கை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

புதுச்சேரியில் ஜூன் 30 ஆம் தேதி வரை, கடற்கரை சாலை மற்றும் பூங்காக்களில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைப் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறுதி சடங்கில் 20 பேரும் கலந்துகொள்ளலாம்.

அதேபோல சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை 100 நபர்களுடன் நடத்திக்கொள்ளவும் புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதி வரை புதுச்சேரியில் அமலில் இருக்கும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here