சமீபத்தில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் ஜனவரி 4ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானதை தொடர்ந்து பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வடமாநிலங்களான திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதியும் மற்றும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.