பெரும்பாலான மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது குற்றாலம் அருவி. இது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள இந்த அருவியில் சீசனுக்கு ஏற்ப மக்கள் செல்வது வழக்கம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஏனென்றால் இந்த குற்றாலத்திற்கு வரும் மக்கள் அருவியில் குளிப்பதன் மூலம் தீராத சில நோய்களும் தீரும் என்ற நம்பிக்கையுடன் வருகின்றனர். ஆனால் கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது.
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களே கவனம்., வரும் பிப்.4 க்குள் இதை கட்டாயம் முடிக்கணும்!!
இந்நிலையில் மெயின் அருவி, ஐந்தருவி, சின்ன குற்றாலம் போன்ற அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டம் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவல்களை அறிந்த சுற்றுலா பிரியர்கள் குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்